Monday, May 25, 2015

வித்தியா – மயூரன் சந்திப்பு: நடந்தது என்ன?


வெறித்த கண்களுடன் அழுவதற்கும் ஆற்றலின்றி வந்திறங்கிய வித்தியாவை எங்கிருந்தோ அடையாளம் கண்டு ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் சரண்யா. என்ன நடந்தது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டவள், வித்தியாவை இறுக்கக்கட்டியணைத்துக்கொண்டு ஓவென்று அழுதாள். நாள் முழுதும் உடம்பெல்லாம் அனலாய் கொதித்துக்கொண்டிருந்த வித்தியாவுக்கு சரண்யாவின் அணைப்புத்தான் சிறிது ஆறுதலை கொடுத்தாலும் வந்திறங்கிய புதிய இடம்; பற்றி எதுவும் புரியாமல் சரண்யாவின் பிடியிலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்து வழிகளை அலையவிட்டாள்.

எல்லாமே புதிதாய் கிடந்தது. சில முகங்கள் எங்கோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தியது. சிலரின் பார்வையில் கருணை தெரிந்தது. சிலரின் பார்வைகள், அங்கு வருவதற்கு முன் சற்று முன் பார்த்த கொடிய முகங்கள் போலவே காணப்பட்டன. சில சின்னஞ்சிறுசுகள் எதுவும் புரியாதவர்களாக வித்தியாவையும் சரண்யாவையும் அழுவுதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தன.

சரண்யாவின் கண்ணீரை துடைத்துவிட்டு கைகளை கோர்த்தபடி மெல்ல மெல்ல நடந்தாள் வித்தியா. சரண்யா ஓடி வந்த திசையில் ஆயிரக்கான மக்கள் கூட்டம் ஒன்று வித்தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு தவிப்பு வழிந்தபடி கிடந்தது.

பயப்படாதே! இவர்கள் எல்லோரும் எனக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்கள்” – என்று கூறிய சரண்யாவை வித்தியா ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க “ம்..எல்லாரும் எங்கட சனம்தான்” – என்றாள் சரண்யா.

அப்போது திடீரென ஏதோ புது தைரியம் வந்ததுபோல் உணர்ந்தாள் வித்தியா. இருந்தாலும் உடல் கொதித்தபடி கிடந்தது.

திரும்பி நேரே பார்த்தவள், தொலைதூரத்தில் ஒரு கொட்டகையில் எவரையும் திரும்பிப்பார்க்காமல் பெரிய பரந்த பலகை ஒன்றில் வர்ணங்களின் உதவியுடன் சித்திரம் வரைந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவனை கண்டாள். அவனின் தோற்றத்தில் தமிழன்தான என்பது தெரிந்தாலும், சின்ன சந்தேகமும் கூடவே அவனில் ஒட்டியிருந்தது.

யார் இந்த பெடியன்” என்று சரண்யாவின் காதுக்குள் மெதுவாக கேட்டாள் வித்தியா.

இவன்தான் மயூரன். போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அண்மையில் இந்தோனேஸியாவில் மரண தண்டனை கொடுக்கப்பட்டு போன மாதம் இங்கு வந்தவன்” என்றாள் சரண்யா.

சொல்லி முடிப்பதற்குள் கண்கள் சிவந்து உரு வந்தவள் போலாளாள் வித்தியா. நடப்பதற்கு உடம்பில் வலுவில்லாதபோதும் இயலுமானவரை வேகமாக அந்த கொட்டகையை நோக்கி நடந்தாள் வித்தியா. “எங்கடி போறா” என்று சரண்யா கூப்பிடிட்டது அவளின் காதுகளில் விளவேயில்லை. அவ்வளவு கோபத்துடன் நடந்தாள் வித்தியா.

நீயா மயூரன்

சற்றும் எதிர்பாராத கேள்வி என்றாலும் அமைதியாக திரும்பி பார்த்த மயூரன், தலையை மேலும் கீழும் அசைத்து “ஆம்” என்றான்.

சிறிது நேரத்திற்கு முன் தன்னை தலையில் அடித்து கொலைசெய்தவனை பார்த்தது போலவே பயங்கர சீற்றமடைந்த வித்தியா –

உன்னை போல ஓருத்தன் கடத்திய போதைப்பொருளினால் நாசமாகிப்போக நான்கு மிருகங்களினால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். அது தெரியுமா உனக்கு” என்றாள் வித்தியா.

மை காய்ந்த தூரிகையை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு எழுந்தான் மயூரன். வித்தியாவின் பின்னால் அவளை அழைத்தபடி ஓடிவந்த சரண்யா, வித்தியாவின் கைகளை பிடித்து இழுத்தாள்.

கைகளை உதறிவிட்டு தனது உக்கிரப்பார்வையால் மயூரனை சுட்டெரிப்பது போல பார்த்தாள் வித்தியா.

உன்னைப்போல கழிசடைகள் செய்யும் காரியத்தால் எத்தனை பெண்கள், எத்தனை குடும்பங்கள் சீரழியுது தெரியுமா? இந்த கறுமத்தை உனக்கு விரும்பமெண்டால் நீ புகைச்சு இங்க வந்திருக்கலாமே. ஏன்டா மற்றவங்களுக்கு கடத்தி மற்றவங்களை மிருகமாக்குறீங்கள்” – என்று வாய்க்கு வந்தபடி பொரிந்துதள்ளினாள் வித்தியா.

அவள் திட்டடியதிலிருந்து ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்ட மயூரன், பதில் எதுவும் சொல்லாமல், பதில் எதுவும் தெரியாமல், குற்ற உணர்வில் கூனிக்குறுகி நின்றான்.

மெல்லிய குரலில், “நான் செய்தது குற்றம்தான். அதற்காக பத்துவருடங்கள் சிறையிலிருந்து என் குற்றங்களை உணர்ந்து வருந்தி திருந்திவிட்டேன். இருந்தாலும் எனக்கு மரண தண்டனை விதித்ததை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு இங்கு வந்தேன்” – என்றான் மயூரன்.

அவனது ஒப்புதல் வாக்குமூலம் வித்தியாவை திருப்திப்படுத்தவில்லை.;

பின்னாலிருந்து அவளது கைகளை பிடித்து இழுத்த சரண்யா “வித்தியா! அவனை விட்டுவிடடி. அவன் மிகவும் நல்லவன். அவன் உண்மையில் இங்கு வந்திருக்கக்கூடாது. செய்த குற்றத்துக்காக பத்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தான். அவன் சிறையிலிருந்த காலத்தில், நன்றாக திருந்திவிட்டான். அவனுக்கு பிறகு சிறைக்கு வந்த கைதிகளை நல்லவர்களாக மனம் மாற்றி அவன்  விடுதலையாகும்போது நல்ல மனிதர்களாக வெளியில் செல்ல காரணமாயிருந்தவன் என்றுகேள்விப்பட்டிருக்கறன்” – என்று சொல்லி முடிப்பதற்குள் -

நிப்பாட்டடி உந்த கதையை” – என்றாள் வித்தியா.

நீ இப்ப என்னடி செல்ல வாறாய். என்னை சீரழித்த காட்டுமிராண்டிகளும் பத்து வருசம் ஜெயில்ல கிடந்து, பிழைய உணர்ந்திட்டம், இப்ப திருந்தீட்டம் எண்டு சொன்னா, செய்த பிழையெல்லாத்தையும் மறந்து மன்னிச்சிடுவியா. உன்ன சீரழிச்சவங்கள பற்றி நீயும் நினைச்சுப்பாத்து சொல்லு பார்ப்பம்” என்று சுளீர் என்று கேட்டாள்.

வித்தியாவும் சரண்யாவுக்கும் பேசிக்கொண்டுபோவது மயூரனுக்கு நன்றாகவே கேட்டது. வரைதலை அப்படியே இடையில் நிறுத்திவிட்டு அந்த இடத்திலிருந்து போய்விட்டான்.

தவறுகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் தவறுகள் இடம்பெற்ற காலத்துக்கு சமாந்தரமாகவே கொடுக்கப்படவேண்டுமே தவிர, பத்து வருடம் கழித்து இருபது வருடம் கழித்து தவறிழைத்தவர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படக்கூடாது. 

“தலைவர் மாமா இருக்கும்போது எப்பிடியெல்லாம், எங்கட அக்காமார் பாதுகாப்பா இருந்தார்கள் எண்டு அம்மா எனக்கு நெடுகலும் சொல்லுவா. இப்படி எத்தினையோ கதையள் அம்மா சொல்லுவா. நாங்கள் அதை அனுபவிக்கவிலையடி. வயது வந்து எங்களுக்கு விசயங்கள் தெரியுற நேரம் பார்த்து, காடையர்களத்தான் நாங்கள் பார்க்கவேண்டி வந்திட்டுது.

நாங்கள் பரவாயில்லை இங்க வந்திட்டம். அங்க இருக்கிற சனம் பாவமடி” – என்று ஆதங்கத்துடன் சொல்லிக்கொண்டே நடந்தாள் வித்தியா.

அவள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டே வந்த சரண்யா –

கவலைப்படாதே. மாமா எங்களுடன்தான் இருக்கிறார்” என்று தீர்க்கமாக சொல்லிட்டு வித்தியாவின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு நடந்தாள்.

(முற்றும்)

2 comments:

  1. இதைசொல்லது பைத்தியம் இல்லை எங்களின் சகோதரியின் கண்னீர்களிற்க்கு நிச்சயமாக நீதி கிடைக்கும்.
    ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது வித்தியாஉடன் சேர்ந்துசெல்லவேண்டும்

    ReplyDelete

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...