காலக்காற்று அன்று மட்டும் ஏனோ
கருகிய நாற்றத்துடன் திடீரென மூச்சிரைத்தது.
நீண்ட அமைதிகளுக்குள் நெட்டி முறித்துக்கிடந்த
வெறுமையான மயான கிடங்குகள்
திடீரென்று இரைகேட்டு பசியோடு அலறத்தொடங்கின
முறிந்து விழுந்த பேனாவின் பாரத்தால்
தாங்கியிருந்த கடைசி ஒற்றையும்
குறை மையினால் எழுதிய
கடைசி வரிகளை சுமந்துகொண்டு
படைத்தவளின் பின்னால் பறந்து சென்றது
ஊழிக்கூத்தின் கடைசி காட்சியிலிருந்து
வேடம் உரிந்த பாவி பாத்திரங்கள்
காலனின் கழுமரத்தை நோக்கிய
நீண்ட வரிசையில் இணைந்துகொண்டனர்
வரிசையின் கடைசியில் குட்டையாக
ஒரு தாய் -
அவர்தான் அருண் விஜயராணி.